யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு, விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு, விசாரணைகள் தீவிரம்..

யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட 2 ம் வருட மாணவி அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணிக்கு நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.  சிறீதரன் கோகிலமதி வயது 22 என்ற பல்கலைக்கழக மாணவியியே 

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டவர். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கையில் 

குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும் இதனால் மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு