காணி ஒன்றில் காயவிடப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சா மீட்பு, ஒருவா் கைது..
பருத்திதுறை இன்பசிட்டிப் பகுதியில் எழுபதுகிலோ கஞ்சாவுடன ஒருவர் கைதுசெய்யப் பட்டுள்ளார்.
அப் பகுதியில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் கிடைத்தஇரகசிய தகவலையடுத்து
மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலையே இந்தக் கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. பருத்திதுறை பகுதியிலுள்ள
காணியொன்றில் கஞ்சா காயவிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் பருத்தித்துறை பொலிஸார் கைது செ ய்துள்ளனர்.