பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது..
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வர்கள் என சந்தேககிக்க ப்படும் 3 இளைஞர்கள் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள னர்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த வடக்கு மாகாண மூத்த பொ லிஸ் அத்தியட்சகரால் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவே இந்தக் கைதுகளை நேற்று மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞனும்இ மானிப்பாயில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 25இ 23இ 27 வயதுகளைச் சேர்ந்த வர்கள்.
மானிப்பாயில் உள்ள மயானத்திலிருந்து இரண்டு வாள்களையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.