4 மாத குழந்தயின் உயிாிழப்பில் தந்தைக்கு சந்தேகம், மரண விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..
வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் 4 மாத குழந்தை திடீரென உயிாிழந்த நிலை யில், குழந்தையின் உயிாிழப்புக்கான காரணத்தை கண்டறிய தந்தையின் விருப்பப்படி பிரேத பாிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது. குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து வாழும் நிலையில்
குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.