வடக்கு மாகாணத்தில் 439 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!
வடக்கு மாகாணத்தில், ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார். இதில் 439 ஆசிரியர் நியமனங்களும்,33 தொழில் நுட்ப உத்தியோகத்தர் நியமனங்களும் வழங்கப்பட்டன.