வடக்கை வாட்டும் கடும்பனி, காலை 7 மணியை தாண்டியே சூாிய உதயத்தை காணும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
வடக்கை வாட்டும் கடும்பனி, காலை 7 மணியை தாண்டியே சூாிய உதயத்தை காணும் மக்கள்..

வடமாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி மூட்டம் காணப்படுகின்றது. குறிப்பாக காலை 7 மணியை தாண்டிய பின்னரும் கூட கடுமையான பனி மூட்டம் காண ப்படுகின்றது. 

மாலை நான்கரை மணிக்கு ஆரம்பிக்கப்படும் பனி, இரவில் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. தினமும் காலையில் அதிகரிக்கும் பனி காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சியின் பரந்தன், ஆனையிறவு போன்ற வெளியான பகுதிகளில் வீதிகளில் பனிமூட்டம் மூடிதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பயணத்தில் ஈடுபட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு