யாழ்.நகாில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பொட்டலம் வாங்கியவருக்கு காத்திருந்து அதிா்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பொட்டலம் வாங்கியவருக்கு காத்திருந்து அதிா்ச்சி..

யாழ்.நகாில் உள்ள உணவகம் ஒன்றில் மதிய உணவு பொட்டலம் வாங்கிய ஒருவா் அந்த பொட்டலத்தில் உள்ள உணவுக்குள் இறந்த நிலையில் மட்டத்தேள் இருந்ததை கண்டு அ திா்ச்சியடைந்திருக்கின்றாா். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள  உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பின்னர் தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று உணவினை பிரித்து பார்த்த போது 

கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் வாடிக்கையாக செல்லும் குறித்த உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளரை உதாசீனம் செய்ததுடன் உணவுப்பார்சலை மீளப்பெற்று வீசி அச்சுறுத்தியுள்ளார். தனது முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள அவ்வுரிமையாளர் மீது வாடிக்கையாளர் 

பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன்  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  முறைப்பாட்டினை செய்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு