SuperTopAds

இரணைமடு குளத்தின் நீா் முகாமைத்துவம் தொடா்பில் உள்ளக விசாரணைக்காக மற்றொரு குழு உருவாக்கம்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் நீா் முகாமைத்துவம் தொடா்பில் உள்ளக விசாரணைக்காக மற்றொரு குழு உருவாக்கம்..

வடக்கு மாகாண பிரதம செயலாளரின் பணிப்பின் பெயரில் வடக்கு மாகாண விவசாய , நீர்ப்பாச ன, கால்நடை அமைச்சின் செயலாளர் ப.தெய்வேந்திரம் தலமையில் இரணைமடு நீர் வெளியேற்ற த்தில் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என கண்டறியும் நோக்கில் ஒரு திணைக்களம் சார் விசாரணை இடம்பெறுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய குளமான இரணைமடுக் குளத்தில் அதிக நீர் வரத்து ஏற் பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை. என எழுந்த விமர்சணங்கள் தொடர்பில் வடக் கு மாகாண ஆளுநர் ஓர் விசாரணைக் குழுவினையும் நியமித்துள்ளார். இதனால் நடந்த சம்பவங்க ளை திணைக்கள ரீதியில் கண்டறிவதற்காக 

பிரதம செயலாளர் என்ற வகையில் குறித்த அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பிரகாரம் அமைச்சின் செயலாளர் தலமையிலான குழுவினர் நேற்றைய தினம் மாவட்டச் செயலகம் , நீர்ப்பாசணத் திணைக்களம் மாவட்ட விவசாயிகளிடம் தமது ஆரம்ப விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.

இவ்வாறு இடம்பெறும் விசாரணைகளின் அடிப்படையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் சமயம் திணைக்களம் மற்றும் பொறியியலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்தப்பணிகள் , பொறியியலாளர்களது நிலமை , விவசாயிகளிற்கு அறிவுறுத்த வேண்டிய பணிகள் தொடர்பிலும் அவ்வாறான பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா எ

ன்பவற்றுடன் அவற்றை மேற்கொள்ள உரிய கால அவகாசங்கள் இருந்தனவா என்பவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.