யாழ்.சுன்னாகம் பகுதியில் 372 கான்களில் எதேனோல் மீட்பு, அதிா்ச்சியடைந்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் 372 கான்களில் எதேனோல் மீட்பு, அதிா்ச்சியடைந்த பொலிஸாா்..

இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட் போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசி தகவலினடிப்ப டையில் மேற்கொண்ட நடவடிக்கையிலையே 

இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது பாரவூர்தி ஒன்று டன் 372 எதனோல் போத்தல் காண் கைப்பற்றப்பட்டுள்ளது. 

ஒவ்வாரு காணும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்மாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாராவுர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை சுன்னாகம் பொலிஸாரிடம் இன்று விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாஅரணைகளை முன்னடுத்து வருகின்ற சுன்னாகம் பொலிஸார் இப் போதைப் பொருளையும் போதைப் பொருளுடன் 

கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு