3 வருடங்களில் சீரழிந்த காப்பெற் வீதி, வடக்கு அபிவிருத்தியின் இலட்சணம்..

பல மில்லியன் ரூபாய் செலவில் காப்பெற் வீதியாக அமைக்கப்பட்ட முட்கொம்பன்- ஸ்கந்தபுரம் இடையி லான வீதி 3 வருடங்களில் மிக மோசமாக சேதமடைந்திருப்பது தொடா்பில் பொதுமக்கள் விசனம் தொிவித் துள்ளனா்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டதனால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் அப்பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமுற்றுள்ளது. இன்னுமு் சில வாரங்கள் சேதமுற்ற பகுதிகள் முற்று முழுதாக பாதிப்புற்று விடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வீதியின் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு வருவதோடு அப் பகுதியும் சேதமடையும் நிலையில் காணப்படுகிறது. அபிவிருத்தியின் போது குறிப்பிட்டப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தரமான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாமையும்,
அபிவருத்திப் பணிகளை கண்காணிக்க வேண்டிய அரச திணைக்களங்கள் உரிய முறையில் கண்கா ணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமையுமே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம் எனவும், இவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டிய மாவட்ட அபிவிருத்தி
ஒருங்கிணைப்பு ஒழுவும் அக்கறையின்றி இருப்பதுவுமே அபிவிருத்தியின் போது முறைகேடுகள் இடம்பெறுவதற்கு காரணம் என்றும் பொது மக்கள் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வீதி மணல் மற்றும் மரம் கடத்தும் கடத்தல்காரா்களின் கனரக வாகன பயன்பாட்டி னாலேயே சேதமடைவதாகவும் மக்கள் கூறுகின்றனா்.