நகரசபைகள், பிரதேசசபைகளின் தலைவா்களை சந்தித்த ஆளுநா்..
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை ஆளுநர் செய லகத்தில் இடம்பெற்றது.
பிரதேச சபைகளின் கடந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.