மிகமோசமாக சேதமடைந்திருக்கும் தொண்டமானாறு- அச்சுவேலி வீதி, மௌனமாக இருக்கும் அதிகாாிகள்..
அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ்வீதியை கடந்த மழைகாலத்தில் வெள்ளம் முழுமையாக மூடி அவ் வீதியின் மேலால் ஓடியமையால் வீதி முற்றாக சேதமைடந்துள்ளது.
தற்போதும் தொண்டமனாறு நன்னீர் தேக்கத்திற்கு அருகில் நீர் வீதியின் மேலாக ஓடுகின்றது.அதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் வழி இலக்கம் 751, 766, 767 ஆகிய பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் அவ்வீதியுடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.