வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 19 ஏக்கா் காணி விடுவிப்பு, 28 வருடங்களின் பின் வீடு திரும்பும் மக்கள்..
யாழ்.வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவ ஆக்கி ரமிப்புக்குள் இருந்த சுமாா் 19 ஏக்கா் காணி இன்றைய தினம் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகளே இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.
ஜே.249,ஜே.250 கிராமசேவகர் பிரிவுக்குரிய காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிக ளை மக்கள் மற்றும் பிரதேச சபையினர், அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.