தை பூச நாளில் மீன்பிடிக்கு செல்கிறது புதிய படகுகள்..
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினால் மயிலிட்டி மக்களுக்கு வழங்கப்பட்ட படகுகள் தை பூச நாளான இன்று கடற்றொழிலுக்காக கடலில் இறக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி கிராமத்தில் கடந்த 27 வருடங்களின் பின்னா் மீள்குடியேறிய மக்களுக்கு தெல்லிப் பழை பிரதேச செயலகத்தினால் கடந்த 18ம் திகதி புதிதாக படகுகள்
வழங்கப்பட்டது. இந்த படகுகள் தை பூச நாளான இன்று நண்பகா் 12 மணிக்கு மீன்பிடிக்குச் செல்லவுள்ளது.