வடமாகாண விவசாய அமைச்சினால் பெருமெடுப்பில் நடப்பட்ட மரங்கள், பராமாிப்பின்றி கிடக்கிறது..

ஆசிரியர் - Editor I
வடமாகாண விவசாய அமைச்சினால் பெருமெடுப்பில் நடப்பட்ட மரங்கள், பராமாிப்பின்றி கிடக்கிறது..

யாழ். நாவற்குழி வீதி . வல்லை வெளி பருத்தித்துறை வீதிகள் இரு மருங்கிலும் நடப்பட்ட நிழல் தரு மரங்கள் பராமரிப்பின்றி அழிவடைந்து வருகின்றன.

கடந்த வடமாகாண சபையின் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை திட்டத்தின் மூலம் யாழில் இந்த மரங்கள் நடப்பட்டன.

 வடமாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பட்ட மரங்களின் ஆயுள்காலமும் முடிவடைந்துவிட்டதா என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

இந்த மரநடுகைத் திட்டத்துக்கு பல இலட்சம் நிதி செலவிடப்பட்டும் மரங்களை பராமரிப்பின்றி விவசாய அமைச்சு கைவிட்டுள்ளது. இதனால் மரங்கள் அழிவடைந்து வருகின்றன.

 இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து மீதமாகவுள்ள மரங்களை பாதுகாக்குமாறு மக்கள் கேட்டு நிற்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு