தேசிய போதை ஒழிப்பு பாடசாலை வார ஆரம்ப நிகழ்வு. நாளை முல்லைத்தீவு வருகிறார் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
தேசிய போதை ஒழிப்பு பாடசாலை வார ஆரம்ப நிகழ்வு. நாளை முல்லைத்தீவு வருகிறார் ஜனாதிபதி..

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறை ப்படுத்தப்பட்டுவரும் “போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்ற

“தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்” ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதுடன் இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை (21) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது.

இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆலோசனையின் பேரில் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் சுமார் 150,000 மாணவர்கள் நாளை காலை போதைப்பொருளுக்கு எதிரான 

உறுதியமொழியினை மேற்கொள்ளவுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு