வீதியில் பயணித்தவர் மீது எச்சில் துப்பல், எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிழுத்தி தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
வீதியில் பயணித்தவர் மீது எச்சில் துப்பல், எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிழுத்தி தாக்குதல்..

வீதியில் பயணித்தவர் திடீரென எச்சில் துப்பியதில் அருகில் வந்தவர் மீது எச்சில் பட்டதால் ஆத்திர மடைந்த நபர் எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் நேற்று கல்லுண்டாய் வெளிபகுதியில் இடம்பெற்றுள்ளது.

காக்கைதீவில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி நபர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார் அவருக்கு முன்னால் சென்ற நபர் திடீரென்று தனது பக்கவாட்டில் துப்பியுள்ளார். பின்னால் சென்றவர் ஹெல்மட் கண்ணாடியை மூடாமல் சென்றதால் 

அவரின் முகத்தை அந்த எச்சில் பதம்பார்துவிட்டது இதனால் ஆத்திரமும் ஆற்றாமையும் அடைந்த நபர் முன்னால் சென்றவரின் ஊந்துரியின் பின்பக்கம் மோதியுள்ளார் சடுதியில் நிலைகுலைந்து முன்னால் சென்றவர் அருகல் உள்ள ஏரிக்குள் விழுந்துவிட்டார். 

துப்பு வாங்கியவரும் அந்த இடத்தில் சண்டித்தனத்துக்காக இறங்கிவிட்டார். ஏரிக்குள் விழுந்தவர் விழுந்த உடனேயே சேற்றை அள்ளி அவர்மீது எறிந்து மோதியுள்ளார். இவ்வாறான நிலையில் வீதியால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி மோதலை தீர்த்துவைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு