யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (20) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். திருநெல்வேலி, தலங்காவில், பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித்துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம் , 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதி, வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்துச் சந்தியிலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, டம்றோ பலாலி வீதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி அலுவலகம், யாழ். புகையிரத நிலையம், சிறிநதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒரு பகுதி, இலந்தைக்குளம் வீதி, புங்கன்குளம் வீதி, சந்தனமாதா கோவில் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந் தோட்டம், கெலன் தோட்டம், பெரிய தோட்டம், உதயபுரம், குருசோ வீதி, அச்சுக்கூட வீதி, பிரதான வீதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு