ரயிலுடன் மோதி முதியவா் மரணம். பலகோணங்களில் விசாரணை..

ஆசிரியர் - Editor I
ரயிலுடன் மோதி முதியவா் மரணம். பலகோணங்களில் விசாரணை..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். இந்த சம்ப வம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக தொியவருவதாவது, 

யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம் 1.30 மணயளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற நகர்சேர் கடுகதி குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 அரியாலை, நாவற்குழி பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல்வெளிகளுக்கு ஊடாக சென்று  கொண்டிருந்த போது, குறித்த வயல்வெளிகளின் ஊடாக வந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். 

இதனை அவதானித்த ரயில் சாரதி ஒலி எழுப்பியபோதும், குறித்த நபர்  ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை 

குறித்த ரயிலில் ஏற்றபட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் மீட்டு தற்கொலையா, 

விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு