யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(19) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.ஈவினை,வசாவிளான்,சுதந்திரபுரம், திடற்புலம்,கோணாவளை,குட்டியப்புலம்,விக்னேஸ்வரா ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.