யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(19) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.ஈவினை,வசாவிளான்,சுதந்திரபுரம், திடற்புலம்,கோணாவளை,குட்டியப்புலம்,விக்னேஸ்வரா ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு