பொலிஸில் செல்வாக்கு உள்ளது என கூறியும் இளைஞர்களை கைது செய்த பொலிஸார், மக்கள் பாராட்டு..

ஆசிரியர் - Editor I
பொலிஸில் செல்வாக்கு உள்ளது என கூறியும் இளைஞர்களை கைது செய்த பொலிஸார், மக்கள் பாராட்டு..

கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உரும்பிராய் சந்தி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிசார் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடமையில் நின்றுள்ளார்கள். 

அதன் போது உரும்பிராய் சந்தியில் உள்ள உணவகத்தில் உணவு வாங்குவதற்கு இளைஞர் ஒருவர் தலைக்கவசம் இன்றி வந்துள்ளார். 

குறித்த இளைஞனை கடமையில் இருந்த பொலிசார் மறித்து தலைக்கவசம் இன்றி வந்தமைக்கு தண்டம் எழுத முற்பட்டு உள்ளார். 

அதன் போது குறித்த இளைஞன் தனக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செல்வாக்கு உள்ளதாகவும் , அங்கே தன்னை பற்றி கேட்டால் 

அங்குள்ள பொலிசார் கூறுவார்கள் நீங்கள் புதிதாக கடமைக்கு வந்துள்ளதால் தன்னை பற்றி தெரியாது தண்டம் எழுத முனைகின்றீர்கள் என கடமையில் நின்ற இரு பொலிசாருடனும் முரண்பட்டு உள்ளார். 

போலீசாருக்கும் இளைஞனுக்கும் இடையில் அதனால் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அவ்விடத்தில் பொதுமக்கள் கூடினார்கள் அதனால் அங்கு கடமையில் நின்ற பொலிசார் 

மேலதிக பொலிசாரை வரவழைத்து , இளைஞனை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

பொலிஸ் நிலையத்தில் தனக்கு செல்வாக்கு உள்ளதாக கூறியும் இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு