தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு..
யாழ்.பலாலி இராணுவ பயிற்றி முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பலாலி பொலிஸார் தெரிவித்தனர். அரியரத்ன என்ற 22 வயதுடைய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.