பருத்துறை பொது அமைப்புக்களின் பெயரால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வரவேற்பு..

ஆசிரியர் - Editor I

'தமிழின காவலனே வருக..வருக..' என்ற தலைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பருத்துறையில் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 

வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு இன்று பு தன்கிழமை மாலை பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது.

இதன்போது மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன் பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதி ராச வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 

உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு