யாழ்.மாநகரசபை முதல்வாிடம் பொலிஸாா் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை முதல்வாிடம் பொலிஸாா் விசாரணை..

யாழ்.மாநகரசபையின் எந்த அனுமதியும் இல்லாமல் நகரசபை எல்லைக்குள் கேபிள் வயா் களை கடத்துவதற்காக நாட்டப்பட்ட கம்பங்களை அகற்றியமை தொடா்பில் பொலிஸாா் மாநகர முதல்வாிடம் விசாரணைகளை நடாத்தியுள்ளனா். 

தனியாா் வானொலி நிறுவனம் ஒன்றின் கேபிள்களை கடத்துவதற்காக யாழ்.மாநகரசபையின் எல்லைக்குள் பரவலாக கம்பங்கள் நாட்டப்பட்டன. இவற்றை நாட்டுவதற்கு மாநகரசபையின் ஒப்புதல் பெறப்படவில்லை. 

இந்நிலையில் மாநகரசபையினால் குறித்த கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் குறித்த வானொலி நிறுவத்தினால் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடா்பில்,

மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு பொலிஸாா் அழைப்பு விடுத்திருந்தனா். எனி னும் முதல்வா் பொலிஸ் நிலையத்திற்கு செல்லாத நிலையில் இன்றைய தினம் யாழ்.மாநர சபைக்கு சென்றிருந்த பொலிஸாா் முதல்வாிடம் விசாரணைகளை நடாத்தியிருந்தனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு