SuperTopAds

நாயில் இனங்காணப்பட்ட அபாயகரமான நோய் தாக்கம் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் நிறைவு..

ஆசிரியர் - Editor I
நாயில் இனங்காணப்பட்ட அபாயகரமான நோய் தாக்கம் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் நிறைவு..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயில் இனம் கானப்பட்டதான ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் 8 நாய்களின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.

என முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரிதிலகன் தெரிவித்தார். இலங்­கை­யில் பெரும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்­க­ளில் அடை­யா­ளங் காணப்­பட்­டது. இந்­த­நோய் மனி­ தர்­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ள­தாக பேரா­த­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 

கால்­நடை பேரா­சி­ரி­யர் அஷோக் தங்­கொல்ல தெரிவித்த கூற்றின் பிரகாரம் விசேட ஆய்விற்காக குறித்த குழுவினர் நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு வருகை தந்திருந்தனர். . இது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளி த்தார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

முல்­லைத்­தீ­வில் குறித்த ட்றைப­ன­சோம என்று சந்தேகிக்கப்படும் நோய் நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளதால் . இந்த நோய் மனி­தர்­க­ளுக்­கும் தொற்­றும் அபா­யம் உள்­ள­தா­கம் கூறப்பட்டது. அவ்வாறு இனம்கானப்பட்ட நாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவாரம் பிரதேசத்திலேயே இனம் கண்டுகொள்ளப்பட்டது. 

அவ்வாறு குறித்த நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நாய் தற்போது இறந்து விட்டது. அதேநேரம் அந்த நாய் வளர்க்கப்பட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமாக கானப்பட்ட 8 நாய்களின் இரத்த மாதிரியும் ஆய்விற்காக பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு தற்போது பெற்றுச் செல்லும் இரத்த மாதிரிகளின் 

ஆய்வு அறிக்கை விரைவில் எமக்குத் அனுப்பி வைக்கப்படும் . அவை கிடைக்கப்பெற்ற பின்பே குறித்த நிலமை தொடர்பில் நூறுவீதமாக உறுதி செய்ய முடியும் என்றார்.