வடகிழக்கு மாகாணங்களுக்கான புதிய வீட்டு திட்டம் வலி,வடக்கு தென்மயிலை கிராமத்தில் அங்குராா்ப்பணம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களுக்கான புதிய வீட்டு திட்டம் வலி,வடக்கு தென்மயிலை கிராமத்தில் அங்குராா்ப்பணம்..

வடகிழக்கு மாகாணங்களில் புதிதாக உருவாக்கப்படவுள்ள வீட்டு திட்டங்களுக்கான அடிக் கல் நாட்டும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்டத்தில் வலி,வடக்கு- தென்மயிலை கிராமத்தில் இ டம்பெற்றுள்ளது. 

வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார். 

இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் 4 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு