யாழ்.நாச்சிமாா் கோவிலில் நின்ற இளைஞா்கள் மீது வாள்வெட்டு, இருவா் படுகாயம்..
யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் உள்ள நாச்சிமாா் கோவில் வளாகத்தில் நின்றிருந்த இளைஞா்கள் மீது வாள்வெட்டு கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் இரு இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனா். தை பொங்க ல் தினமான இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞா்கள் அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றனா்.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.