பருத்துறை- கற்கோவளம் பகுதியில் இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், இருவா் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..
பருத்துறை- கற்கோவளம் பகுதியில் 22 வயதான இளைஞா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் இ ருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸாா், மேலும் ஒருவரை தேடுவதாகவும் கூறியுள்ளனா்.
கற்கோவளத்தைச் சேர்ந்த வா.அமல்கரன் (வயது-–22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அமல்கரன் தனது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் உரையாடிக் கொண்டு நகர்ந்து சென்றபோது சற்றுத் தூரத் தில் நின்ற இனந்தெரியாதவர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம் பவம் தொடர்பாக தந்தை, மகன் என இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் தேடப்பட்டு வருகின்றார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.