யாழ்.வல்லை உதயசூரியன் கழகத்தினரால் முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைப்பு.

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை உதயசூரியன் கழகத்தினரால் முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைப்பு.

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, உதயசூரியன் கழகத்தினரால், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வல்வை உதயசூரியன் கழக கனடாக் கிளையின் நிதியுதவியில், வல்வை விக்கினேசுவரா சனசமூகசேவா நிலையம், யாழ்ப்பாணம் வல்வை உதயசூரியன் கழகம் ஆகியனஇணைந்து இந்த கற்றல் கருவிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள தேறாங்கண்டல் அ.த.க பாடசாலை, ஐயங்கன்குளம் அ.த.கபாடசாலை மற்றும், புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை, பழையமுறிகண்டி பாடசாலை ஆகியபாடசாலைகளின் மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 09.01.2019 இன்றைய நாள் இடைபெற்ற இந் நிகழ்வுகள், அந்தந்தப் பாடசாலைகளின் பிரதான மண்டகங்களிலே இடம்பெற்றன.

அத்துடன் தேறாங்கண்டல் அ.த.க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 80மாணவர்களுக்கும், ஐயங்கன்குளம் அ.த.க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 90மாணவர்களுக்கும், மற்றும் புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலையிலுள்ள 20மாணவர்களுக்கும், 

பழையமுறிகண்டி பாடசாலையிலுள்ள 10மாணவர்களுக்குமாக மொத்தம் நான்கு பாடசாலைகளைச்சேர்ந்த 200மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு