சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெற காத்துக் கிடக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெற காத்துக் கிடக்கும் மக்கள்..

யாழில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்திற்கு முன்னால் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

சாரதி அனுமதிப் பத்திரம் எடுப்பதற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு யாழ். தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துக்கு வரும் மக்கள் 

ஒரு நாள் காத்துக்கிடந்து மருத்துவ சான்றிதழை பெற்றுச் செல்வதாக விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் அதிகாலை 5 மணிக்கு வந்து இடம்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் 

அன்றைய தமது கடமைகள் தடைப்படுவதாகவும். வேலை விடுமுறை எடுத்து வந்து நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இதில் கவனம் எடு்த்து இந்த நடைமுறையை இலகுபடுத்துமாறு கேட்டு நிற்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு