சுன்னாகம்- சூராவத்தை பகுதியில் நிதி நிறுவன ஊழியா்களிடம் வழிப்பறி..
யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியாா் நிதி நிறுவனத்தின் ஊழியா்களை வழிமறித்த கொள்ளை கும்பல் பணத்தை பறித்து க் கொண்டு தப்பி ஓடியுள்ளது.
நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து சென்றபோது
சூராவத்தை பகுதில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்திருந்த மூவர் ஊழியர்களை மறித்து தாக்கி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்நிலையத்தில் செய்யபட்டு உள்ள முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறை யினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள படம் கோப்புபடம்)