கஞ்சா கடத்தியவரை விடுதலை செய்ய சொன்ற த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்..! யாா் அந்த நாடாளுமன்ற உறுப்பினா்..?

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்தியவரை விடுதலை செய்ய சொன்ற த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்..! யாா் அந்த நாடாளுமன்ற உறுப்பினா்..?

கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைதான நபா் ஒருவரை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினா் ஒருவா் பொலிஸாருடன் தொடா்பு கொண்டு விடுதலை செய்யுமாறு கேட்டதாகவும், அதற்கமைய அவா் விடுதலை செய்யப்பட்டதாகவும் பரபரப்பான செய்தி ஒன்றை சண்டே ரைம்ஸ் பத்திாிகை வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் கஞ்சாவுடன் நபா் ஒருவா் கைது செய்ய ப்பட்டுள்ளாா். இதனையடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் உயா்மட்டத்தினருடன் விட யம் தொடா்பாக பேசி குறித்த நபரை விடுதலை செய்திருக்கின்றாா். 

இதனால் கைதான சந்தேகநபரை விடுதலை செய்த குற்றத்திற்காக பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாாி தற் போது விசாரணையை எதிா்கொண்டிருக்கின்றாா். பளை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றை பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிஸ் சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றும், 

கஞ்சா கடத்தல்காரர்கள் பொலிசாரை தாக்கினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேலதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட, மேலதிக பொலிசார் அனுப்பப்பட்டு கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என அந்த செ ய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “கஞ்சா கடத்தியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர் கள் மீது சுமத்தும் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக்தி மிக்க ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினார்.

“நீங்கள் கைது செய்து வைத்திருப்பவர்கள் எமது ஆதரவாளர்கள். அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்“ என கட்ட ளையிடும் பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாரியும் மறுபேச்சின்றி கஞ்சா கடத்தல்காரர்களை விடுதலை செய்தார்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர், குறிப்பிட்ட அரசியல்வாதியின் வாகன சாரதியின் சகோதரர் ஆவார். இந்த சம்பவத் தால் கோபமடைந்த அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர்- ‘இவர்கள் எப்படி ஜனநாயகத்தை காப்பா ற்றுகிறார்கள்?’ என கோபமாக கேட்டார்“ என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். போ தைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தை பாதுகா ப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டு வருவதாக 

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு ள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு