பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டியவா் கழுத்தில் கயிறு இறுகி உயிாிழப்பு.. மதுபோதையில் நடந்த விபாிதம்..

ஆசிரியர் - Editor I
பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டியவா் கழுத்தில் கயிறு இறுகி உயிாிழப்பு.. மதுபோதையில் நடந்த விபாிதம்..

மதுபோதையில் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்கு முயற்சித்த ஆசிாியா் ஒருவா் கயிறு கழுத்தை இறுக்கியதில் பாிதாபகரமாக உயிாிழந்திருக்கின்றாா். 

இந்த சம்பவம் நேற்று கிளிநொச்சி- பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பளை, கரந்தாய் பகுதியை சேர்ந்த முத்துகிருஸ்ணன் கோபாலகிருஸ்ணன் (37) என்ற ஆசிரியரே உயிரிழந்தார்.

புதுவருட தினமான நேற்று காலையிலிருந்து மதியம் வரை நண்பர்களுடன் மதுபான விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். 

திக மது அருந்தியதால் போதையின் உச்சத்திற்கு சென்ற ஆசிரியர், இரவு பிள்ளைகளிற்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்திருக்கிறார். 

கயிற்றில் தூங்குவதை போல செய்து காண்பித்தபோது, கழுத்தில் கயிறு இறுகியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு