கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதியுச்ச நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதியுச்ச நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவி திட்டங்களை தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வருகிறது. 

மேற்படி இரு மாவட்டங்களும் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவை யான உதவி பொருட்களுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். 

இன்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கான உதவி திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இன்றைய தினம் உதவி திட்டம் சேவையில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து கொண்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு