தமிழீழ விடுதலை புலிகளின் கொடி கரையொதுங்கிய இடத்தில் இன்று மோட்டாா் சைக்கிள் ஒன்று கரை ஒதுங்கியது..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் கொடி கரையொதுங்கிய இடத்தில் இன்று மோட்டாா் சைக்கிள் ஒன்று கரை ஒதுங்கியது..

முல்லைத்தீவு கடற்பகுதியில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளது. 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் குறித்த ஸ்கூட்டி கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் 

கரை ஒதுங்கியுள்ளது.  மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை 

போலீசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு