தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில்   காட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்  (17) மீட்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்  (17) இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5  81  மில்லிமீட்டர் எறிகணை -01  81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பிரதேச கட்டளை அதிகாரி உதவி பொலிஸ் அதிகாரி பியனந்த அவர்களது ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி டி எப் யு கே அபேரத்ன அவர்களது தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் எந்துலால் 

பொலிஸ் சாஜன்ட் 35259 பிரசன்ன பொலிஸ் கொஸ்தாபல் கலான 90769 பண் டார 11289 ஜ.ஜசுந்தர 68285 சு ரங்க 90585  ரத்னாயக்க உள்ளிட்டவர்களால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு