தமிழ் இனம் சந்தித்த மோசமான பேரவலத்தின் தடங்களே.. இன்று கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள்.

ஆசிரியர் - Editor I
தமிழ் இனம் சந்தித்த மோசமான பேரவலத்தின் தடங்களே.. இன்று கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள்.

ஒருநாள் கப்­டன் லலித் ஹேவா என்னை அழைத்­தார். மண்­வெட்­டியை விரைந்து எடுத்­து­வ­ரு­மாறு கட்­ட­ளை­யிட்­டார். அவர் குறிப்­பிட்டபடியே மண்­வெட்­டியை எடுத்­துக் கொண்டு அவர் இருக்­கும் இடம் நோக்கி நகர்ந்­தேன். 

நான் அவ்­வி­டத்தை அடைந்தபோது, அங்கு ஆடை­யின்றி பெண் ஒரு­வர் நிர்­வா­ணக் கோலத்­தில் நின்­றார். கப்­டன் ஹேவா அந்­தப் பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­னார்.

பின்பு நான் எடுத்­து­வந்த மண்­வெட்டி மற்­றும் அங்­கி­ருந்த இன்­னும் சில ஆபத்­தான பொருள்­க­ளைக் கொண்டு அந்­தப் பெண்­ணை­யும் அவ­ரு­டைய துணை­வ­ரை­யும் தாக்­கிக் காயப்­ப­டுத்­தி­னார்.

இரு­வ­ரும் அந்த இடத்­தி­லேயே சாவ­டைந்­த­னர்.அவர்­கள் இரு­வ­ரும் முன்பு முகா­முக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­வர்­கள்.”

இது சோம­ரத்­தின ராஜ­பக்­ச­வின் வாக்­கு­மூ­லம். உண்­மை­யில் யார் இந்த சோம­ரத்­தின ராஜ­பக்ச? எதற்கு அவன் இப்­ப­டி­யொரு வாக்­கு­மூ­லத்தை அளித்­தான்? என்ற கேள்­வி­கள் உங்­க­ளுக்­குள் இயல்­பா­கவே எழு­வது புரி­கி­றது.

1996ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் ஏழாம் திக­தியை கடந்து வந்த ஒவ்­வோர் தமிழ் குடி­ம­க­னது நெஞ்­சக் குழி­யி­னுள்­ளும் இந்­தக் கேள்­வி­க­ளுக்­கான பதில் தீர்­வின்றி அங்­க­லாய்த்­துக்­கொண்­டி­ருக்­கும்.

‘செம்­ம­ணிப் புதை­குழி’ இன­வ­ழிப்­புச் 
செயற்­பாட்­டின் ஆரம்­பம்!

இது தனித்து வாக்­கு­மூ­ல­மல்ல. இலங்­கை­யின் அதி­கார மேலாண்மை காலத்­துக்­குக் காலம் திட்­ட­மிட்ட முறை­யில் தமி­ழர் பிராந்­தி­யங்­க­ளில் நடத்தி வந்த இனச் சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்த ஆதா­ரம். 

சுருங்­கக் கூறின் 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­லில் மேற்­கொள்­ளப்­பட்ட இன­வ­ழிப்­புச் செயற்­பாட்­டுக்­கான ஆரம்­பம் எனக் கூறி­வி­ட­லாம்.

செம்­ம­ணி­யில், ‘யாழ்ப்­பா­ணம் உங்­களை வர­வேற்­கி­றது’ என்ற வாச­கம் பொலி­வோடு காட்சி தரு­கின்ற வர­வேற்பு வளை­வுக்கு அரு­காக இலங்கை ஆக்கிர­மிப்பு இரா­ணு­வத்­தின் முகாம் அமைந்­தி­ருந்­தது.

அங்கு வெறி­பி­டித்த மிரு­கங்­கள் குடி­கொண்­டி­ ருந்­தன. தமிழ் மக்­களை கொன்­றொ­ழிப்­ப­தற்­கான அர­சின் செயற்றிட்டங்களை நடை­ மு­றைப்­ப­டுத்­து­கின்ற மத்­திய நிலை­யங்­க­ளுள் ஒன்­றான பரி­ண­மிப்­பாக இந்த இரா­ணுவ முகா­மும் செய­லாற்­றி­யது. 

குறிப்­பாக யாழ்ப்­பா­ணம் சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூ­ரி­யின் மாணவி கிரு­சாந்­தியை மிகக் கொடு­ர­மான முறை­யில் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யும், கிரு­சாந்­தியை தேடிச் சென்ற தாயார், 

சகோ­த­ரன் மற்­றும் அயல்­வீட்­டுக்­கா­ரர் ஆகி­யோரை சித்­தி­ர­வதை செய்து கழுத்து நெரித்­துப் படு­கொலை செய்­தும் புதைத்த காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை தமிழ்­மக்­கள் இல­கு­வில் மறந்­து­ வி­ட­மாட்­டார்­கள்.

இலங்­கை­யின் 
அரச தலை­வர்­கள் 

ஒவ்­வொ­ரு­வ­ரும் களங்­க­மு­டை­ய­வர்­கள்!
செம்­ம­ணிப் புதை­கு­ழி யில் இவர்­கள் மட்­டுமே கொன்று புதைக்­கப்­ப­ட­ வில்லை. அங்கு சுமார் 600 க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கொன்று புதைக்­கப்­பட்­டா ர்­கள் என்ற செய்தி வெளிப்­பட்­டது.

 செம்­ம­ணிப் புதை­குழி வழக்கு அப்­போ­தைய அர­ச­ த­லை­வ­ராக இருந்து ஆட்சி அதி­கா­ரம் செய்த சந்­தி­ரிகா பண்­டா­ர­ நா­யக்க குமா­ர­துங்­கவின் நிர்­வா­க­வி­ யலைக் களங்­கப்­ப­டுத்­தி­யது. 

செம்­ம­ணிப் புதை­குழி வழக்கு தீராத அழுத்­தங்­க­ளை­யும் மீள முடி­யாத நெருக்­க­டி­க­ளை­யும் அர­சுக்கு ஏற்­ப­டுத்­தி­யது. இந்த வழக்கு விசா­ர­ணை­யில் சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்ட இரா­ணு­வச் சிப்­பாய் சோம­ரத்­தின ராஜ­பக்ச கொழும்பு நீதி­மன்­றத்­தில் வழங்­கிய வாக்­கு­மூ­லம் அனைத்­து­லக கவ­னத்­தை­யும் ஈர்த்­தது.

மனித உரி­மை­க­ளின் கடை­நி­லை­யும் 
பொய்த்துப்போயுள்ள நீதி­ப­ரி­பா­ல­ன­மும்!

“செம்­ம­ணி­யில் கிரு­சாந்­தி­யும் அவ­ரது உற்­றார் உற­வி­ன­ருமே தனித்­துப் புதைக்­கப்­ப­ட­வில்லை. 400க்கும் மேற்பட்டவர்கள் புதைக்­கப்­பட்­டுள்ளார் கள். மேல­தி­கா­ரி­க­ளின் கட்­ட­ளைக்கு கீழ்­ப­டிந்து கொலை செய்­யப்­பட்ட சட­லங்­களைப் புதைப்­ப­து­தான் எனது வேலை. 

என்னை செம்­ம­ணிக்கு கூட்­டிச் சென்­றால் தமி­ழர்­க­ளின் புதை­கு­ழி­களை என்­னால் அடை­யா­ளம் காட்ட முடி­யும். செம்­ம­ணி­யை­விட 16 புதை­கு­ழி­கள் உள்­ளன. 

அவற்­றுள் பத்­துப் புதை­ கு­ழி­களை அடை­யா­ளம் காட்ட முடி­யும்” என்ற வெளிப்­பாடு அனை­வ­ரை­யும் கதி­க­லங்க வைத்­தது.

உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்­டும் என்ற தன்­னார்­வ­மான உணர்வை பன்­னா­டு­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தி­யது. மனித உரிமை அமைப்­புக்­கள் பல­வும் இது­கு­றித்து குரல் கொடுத்­தன. 

புதை­கு­ழி­யில் இருந்து வெளிப்­பட்ட எலும்­புக்­கூ­டு­கள் உயிர்­கொண்டு தமக்­கான நியா­யத்தை வேண்டி நின்­றன.ஆனா­லும் தீர்வு கிடைக்­க­வில்லை. மனித உரி­மை­கள் செய­லி­ழந்­து­போ­யின. 

ஆம், இதன்­வ­ழிப்­பட்டே தற்­போ­தைய அரச மேலாண்­மை­யும் இறு­திப் போரில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லைக்­கான விசா­ர­ணை­க­ளில் இருந்து தப்­பிக்க மேற்­கொள்­கின்ற பிர­யத்­த­னங்­க­ளும், 

பொறுப்­புக்­கூ­ற­லில் இருந்து அரசு பின்­வாங்­கு­கின்ற போக்­கும் இலங்­கை­யில் உள்ள மனித உரி­மைச் சட்­டங்­கள் கொண்­டுள்ள வலு­வற்ற தன்­மை­யையே எடுத்­தி­யம்பி நிற்­கின்­றன.

‘மன்­னார் புதை­குழி’ தமி­ழின 
அழிப்­பின் பிறி­தொரு எச்­சம்!

இந்­த­சந்­தர்ப்­பத்­திலே அண்­மை­யில் மன்­னார் நகர நுழை­வா­யி­லில் அமைந்­தி­ருந்த ‘லங்கா சதொச’ கட்­ட­டம் உடைக்­கப்­பட்டு அவ்­வி­டத்­தில் புதிய கட்­ட­டம் அமைக்­கும் பணி­கள் நடை­பெற்ற போது, 

அங்கு அக­ழப்­பட்ட மண் மாதி­ரி­யில் மனித எலும்பு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக 3 நாள்­கள் மன்­னார் நீத­வான் மற்­றும் சட்ட மருத்­துவ அதி­காரி ஆகி­யோர் முன்­னி­லை­யில் மேற்­கொள்­ள­பட்ட பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யின் போதே இவ்­வாறு சந்­தே­கத்­துக்­கி­ட­மான எலும்­புத் துண்­டு­கள் 

மீட்­கப்­பட்­டுள்­ளன.அதைத் தொடர்ந்து இது­வ­ரை­யாக குறிப்­பாக 115 நாள்­கள் இடம்­பெற்­றுள்ள அகழ்­வுப் பணி­க­ளில் 276 மனித எலும்­புக்­கூ­டு­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

அவற்­றுள் 269 எலும்­புக்­கூ­டு­கள் அகற்­றப்­பட்டு நீதி­மன்­றப் பாது­காப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ளன.இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வுப் பணி­யில் 21 எலும்­புக்­கூ­டு­கள் சிறு­வர்­க­ளு­டை­யது என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தவிர சந்­தே­கத்­துக்கு இட­மான மனித எலும்­புக்­கூ­டு­கள் மூன்­றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தத் தக­வலை சட்ட மருத்­துவ அதி­காரி சமிந்த ராஜ­பக்ச உறு­திப்­ப­டுத்­தியுள்ளார்.

இதில் மீட்­கப்­பட்ட மனித எலும்பு மாதி­ரி­கள் ‘காபன்’ சோத­னைக்­காக அமெ­ரிக்­கா­வின் புளோ­ரிடா மாகா­ணத்­துக்கு எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் அனுப்­பப்­ப­ட­லாம் என்ற தக­வ­லும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மனித உரிமை மீறல்­கள் குறித்து 
சமூக நீதியை யார் நிலை­நாட்­டு­வது?

இந்­த­வி­ட­யங்­கள் அனைத்­தும் அவ­தா­னத்­துக்­கு­ரி­யன. செம்­ம­ணிப் புதை­கு­ழி­யின் பின்­பான, இறு­திப் போர் இட­ரின் பின்­பான மிகப்­பெ­ரிய அவ­லத்­தின் அடை­யா­ள­மா­கத் தற்­போது மேலெ­ழுந்த நிற்­கின்­றன. 

குறிப்­பாக ஜன­நா­ய­கத்­தின் பாற்­பட்டு ஆட்சி அதி­கா­ரம் செலுத்தி வரு­வ­தாக மார்­தட்­டிக்­கொள்­கின்ற கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளின் ஆட்­சித்­தி­றனை மலி­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

மிகப் பிர­தா­ன­மாக இலங்­கை­யில் குடி­கொண்­டுள்ள மனித உரி­மை­க­ளின் உறு­திப்­பாட்டை கேள்­வி­நி­லைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த அவ­லத்­தின் சூத்­தி­ர­தா­ரி­கள் யார் என்­பது குறித்து இது­வரை ஆக்கபூர்­வ­மான விசா­ர­ணை­கள் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை. மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­தின் உய­ரிய பீட­மாக சொல்­லப்­ப­டு­கின்ற நாடா­ளு­மன்­றத்­தில் 

இது குறித்து ஆழ­மான கருத்­தா­டல்­கள் இடம்­பெற்­றதை அவ­தா­னம் கொள்ள முடி­ய­வில்லை.பன்­னாட்­ட­ள­வி­லும் இந்த விட­யம் அவ­தா­னத்­துக்­கு­ரி­ய­தாக மாற்­றங் காண­வில்லை.மனித உரிமை அமைப்­பு­கள் குரல்­கொ­டுப்­ப­தா­க­வும் தெரி­ய­வில்லை.

உண்மையில் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டுகொள்ளப்பட்டுள்ள மேற்போந்த செயல்வினைகள், செம்மணிப் புதைகுழி விவகாரம் போன்று 

மன்னார் புதைகுழி விவ காரத்தையும் மூடி மறைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தை பலமாகவே ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும்.இல்லாது போனால் கடந்த காலங்களைப் போலவே பொறுப்புக்கூறலில் இருந்து 

பின்வாங்க வும், ஆதரங்களைச் சுவடு தெரியாமல் அழித்து விடுவதற்கும் திரைமறைவில் காய்நகர்த்தல்களை அரசு மேற்கொள்வ தற்கு ஏதுவான சூழல் உருவாகிவிடும் என்பதை உணர்ந்துகொள்ளத் தலைப்பட வேண்டும். 

அத்துடன் சோம ரத்தின ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் குறிப்பட்டது போன்று, ‘செம்மணியை விட 16 புதைகுழிகள் உள்ளன. அதில் பத்துப் புதைகுழிகளை அடையாளம் காட்ட முடியும்!

 என்ற விடயம் நீண்ட காலத்தின் பின்பு நீதித்துறை கண்டு கொள்ள வேண்டிய தேடலையும், அது மக்களுக்கு வழங்கவேண்டிய சமூக நீதியையும் வலியுறுத்தி நிற்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு