தலைக்­கே­றிய போதை­யில் மக­னைக் கடித்து குத­றிய தந்தை!!

ஆசிரியர் - Editor I
தலைக்­கே­றிய போதை­யில் மக­னைக் கடித்து குத­றிய தந்தை!!

கடி காயங்­க­ளுக்கு இலக்­கான 5 வய­துச் சிறு­வன் தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.  

போதை தலைக் கேறிய தந்­தையே சிறு­வ­னைக் கடித்­துள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது. சம்­ப­வம் தொடர்­பில் சிறு­வ­னின் தந்தை பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். 

யாழ்ப்­பா­ணம் இணு­வில் பகு­தி­யில்  சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.   சிறு­வன் கை , முதுகு , முகம் எனப் பல இடங்­க­ளி­லும் கடி காயங்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்­ளான். 

முறைப்­பாட் ­டைப் பதிவு செய்த சுன்­னா­கம் பொலி­ஸார் தந்­தை­யைக் கைது செய்­த­னர். விசா­ர­ணை­க­ளில் போதையே இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 

மேல­திக விச­ர­ணை­க­ளி்ன் பின்­னர் இன்று அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 

இதே­வேளை  சிறு­வ­னின் உடல்­க­ளில் ஏற்­பட்ட காயங்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றது என்­றும், தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு