இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டது! வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியில்!!
நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.