அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்காவின் பதவியை பறித்த ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்பட்டது உட்பட உயர் அதிகாரிகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பதிவொன்றை ஸ்டெஃபனிஷினா, இது தனிப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்பட்ட தனது சொந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லாத தருணத்திலும் அமெரிக்க ஆயுதங்களின் விநியோகத்தை அதிகரித்து ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டது வரை, தனது பதவிக் காலத்தில் பல சாதனைகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவி விலகலை கோரவில்லை என்று ஸ்டெஃபனிஷினா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவரது சொத்து விவர அறிவிப்பில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மாதமே பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை அவர் தெரிவித்திருந்ததாக உக்ரைனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




