தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்..

ஆசிரியர் - Editor I

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலய பின்பக்கத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில்  நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இன்றைய தினம் இரத்தானமும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் அரசியல் பிரதிநிதிகள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து இரத்ததானத்தை வழங்கியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு