கண்காணிப்புக்கு உட்படாது ஹோர்முசை எவரும் கடக்க முடியாது - ஐ.ஆர்.ஜி.சி தளபதி அலி ஓஸ்மாயி எச்சரிக்கை!

எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஈரானியப் படைகளால் அடையாளம் காணப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முடியாது என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதி அலி ஓஸ்மாயி எச்சரித்துள்ளார்.
பிராந்தியத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தனது தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் தீர்க்கமான பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.




