அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி மனிதன் - வெளியானது இரகசியம்!

ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இறுதி அஞ்சலி பிரார்த்தனையின்போது, கருப்பு முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,
அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என்பவர் தான் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் தனது முகத்தை மூடி வந்ததாக தெரிவித்துள்ளன
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மொஜ்தபா தனது தந்தையுடன், இல்லத்தின் வேறு அறையில் இருந்து உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அவரின் முகம், கால்கள், கை மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன




