ஜனாதிபதியின் உதவியுடனேயே வெளிநாடு சென்றுள்ளார் அட்மிரல் விஜேகுணரத்ன! - நீதிமன்றில் தெரிவிப்பு
முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பூரண ஒத்துழைப்புடனேயே வெளிநாடு சென்றுள்ளதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.
5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இதனை நீதிவானிடம் தெரிவித்தார்.