SuperTopAds

மூடப்பட்ட வான்பரப்புகள் - இலங்கைக்கான நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

ஆசிரியர் - Editor II
மூடப்பட்ட வான்பரப்புகள் - இலங்கைக்கான நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் பாதித்துள்ள போர் பதற்றம் காரணமாக,  தற்போது 30 சதவீத சுற்றுலாப் பயணிகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களை 100 சதவீதம் வெற்றிகரமாக மாற்றுவதே சுற்றுலாத்துறை அமைச்சின் நோக்கமாகும்.

அந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் சில நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது சில திட்டங்களின் வெற்றிக்குத் தடையாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.