நிலத்தை அபகரித்து இனத்தை அழிக்கும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்! - கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Admin
நிலத்தை அபகரித்து இனத்தை அழிக்கும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்! - கஜேந்திரகுமார்

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தான் தமிழ் இன அழிப்பினை செய்ததார். அவருடைய ஆட்சியனை வீழ்த்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும். ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாற்றியதன் பின், இன்று இதனை நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும், இன அழிப்பின் முக்கிய அங்கமான நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருந்தால் எம்மக்கள் ஆழமாக சிந்திக்க தொடங்க வேண்டும் இது ஒரு ஆட்சி சம்மந்தப்பட்ட விடயமா? அல்லது இன அழிப்பு சம்மந்தப்பட்ட விடயமா? இது ஒரு இனஅழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியினை விழுத்தினால் புதிய ஆட்சி வந்தால் இனஅழிப்பினை தடுக்கலாமா என்று நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும். ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.

அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இனஅழிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடிய தத்துவத்தை அந்த கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். சிங்களவர்களை பொறுத்தமட்டில் இந்த இலங்கை தீவு சிங்கள பௌத்த நாடு அவர்களுக்குத் தான் சொந்தம் என்று நிகைக்கின்றார்கள்.

இன்று வடகிழக்கில் தமிழர் ஒரு தேசமாக வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.இது ஆட்சி சம்மந்தப்பட்ட விடயம் அல்ல அவர்கள் இனம் சார்ந்த அடிப்படைக்கொள்கை. எந்த நபர் மாறினாலும் அந்த கொள்கை ஒன்று தமிழ் தேசத்தினை பொறுத்தமட்டில் நாங்கள் போராடினால் எங்கள் உரிமைகளை பெறலாம். ஏதோ 16 இல் தீர்வு 17 இல் தீர்வு 18இல் தீர்வு என்றும் இப்போது 19 இல் தீர்வு வரும் என்று கூறி தமிழர்களை ஏமாற்றக்கூடாது. நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் தென்தமிழ் தேசத்தினை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது முடிவிற்கு வர இருக்கின்றது. அந்த தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாறு நிலத்தொடர்பை சிதைக்க அது நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும்.

தமிழ் இனத்தினையும் தமிழ்தேசத்தினையும் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணை சார்ந்த பிரச்சினை அல்ல. தமிழ்தேசத்தினை சார்ந்த பிரச்சினை தமிழரின் இருப்பு சார்ந்த பிரச்சனை இந்த இடத்தில் தமிழர்களின் ஆழத்தினை புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும்.

முல்லைத்தீவு மண் பறிபோனால் மணலாறு மண் பறிபோனால் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு, இந்த இனஅழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நாங்கள் செயற்படாமல் இருக்கும் வரைக்கும் இந்த இனம் அழியும். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அந்த தடுப்பிற்கு முதல் புள்ளியாக இது அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு