SuperTopAds

சயந்தனின் பொறுப்பற்ற செயலால் கூட்டமைப்புக்கு ஏற்பட இருந்த அவமானம்!!

ஆசிரியர் - Editor II
சயந்தனின் பொறுப்பற்ற செயலால் கூட்டமைப்புக்கு ஏற்பட இருந்த அவமானம்!!

சாவ­கச்­சேரி நகர சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்சி வேட்­பு­மனு தாக்­கல் செய்­யுமா இல்­லையா என்­பது தொடர்­பில் கடைசி நிமி­டம் வரை­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு தொற்­றிக்­கொண்­டது.

வேட்­பா­ளர் தெரி­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன் மற்­றும் கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ளர் க.அருந்­த­ப­வ­லான் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான நீண்ட இழு­பறி மற்­றும் கருத்து மோதலே இந்­தத் தாம­தத்­திற்­குக் கார­ணம் என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

வேட்பு மனுத் தாக்­கல் செய்­வ­தற்­கான நேரம் நிறை­வ­டை­வ­தற்கு 5 நிமி­டங்­க­ளுக்கு முன்­னரே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பு­ம­னுவை நேற்­றுத் தாக்­கல் செய்­தது.

சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­யும் பொறுப்பை சயந்­தன் மற்­றும் அருந்­த­வ­பா­லன் இரு­வ­ரி­ட­மும் கட்சி ஒப்­ப­டைந்­தி­ருந்­தது.

ஆனால், வேட்­பா­ளர் தெரி­வில் இரு­வ­ருக்­கும் இடை­யில் தொடர்ந்து முரண்­பாடு நீடித்து வந்­தது. இரு­வ­ரும் தத்­த­மது ஆத­ர­வா­ளர்­களை நிறுத்­து­வ­தி­லேயே முனைப்­புக்­காட்­டி­னர்.

இத­னால் வேட்பு மனுத் தாக்­க­லின் இறுதி நாளான நேற்­றுக் காலை வரை­யி­லும் எந்த இறுதி முடி­வும் எட்­டப்­ப­டா­மல் இருந்­தது.

கட்­சி­யின் தலை­மைக்கு விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது. கட்­சி­யின் தலை­மை­யி­னா­லும் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­க­மு­டி­ய­வில்லை.

வேட்பு மனுத் தாக்­கல் மதி­யம் 12 மணிக்கு முடி­வ­டைய இருந்த நிலை­யில், 11.55 மணி­ய­ள­வி­லேயே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அவ­சர அவ­ச­ர­மா­கத் தனது வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்­தது. அந்த வேட்பு மனு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.