இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக சுப்மன் கில் நியமனம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக சுப்மன் கில் பெயரிடப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், இந்திய அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்குகிறார்.
சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், புதிதாக அணிக்குள் உள்வாங்கப்படவுள்ள வீரர்கள் தொடர்பில் ரசிர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பிரகாசித்து வரும் சாய் சுதர்ஷனுக்கு இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருண் நாயர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம்
- சுப்மன் கில் (அணித் தலைவர்)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- கே.எல்.ராஹூல்
- ரிஷப் பண்ட்
- துருவ் ஜூரெல்
- ரவீந்திர ஜடேஜா
- குல்தீப் யாதவ்
- ஜஸ்பிரிட் பும்ரா
- மொஹமட் சிராஜ்
- ஆகாஷ் தீப்
- பிரசித் கிருஷ்ணா
- சாய் சுதர்ஷன்
- அபிமன்யு ஈஸ்வரன்
- கருண் நாயர்
- நித்திஷ் குமார் ரெட்டி
- வொஷிங்டன் சுந்தர்
- சர்துல் தாக்கூர்
- அர்ஷ்தீப் சிங்