SuperTopAds

குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம் - தகவல் அறிந்து உயிர்மாய்த்த காதலி!

ஆசிரியர் - Admin
குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம் - தகவல் அறிந்து உயிர்மாய்த்த காதலி!

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.     

நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான அவரது காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.