SuperTopAds

கருணா- பிள்ளையான் மீண்டும் இணைந்தனர்!

ஆசிரியர் - Editor IV
கருணா- பிள்ளையான் மீண்டும் இணைந்தனர்!

கருணா, மற்றும் பிள்ளையான் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திடப்பட்டது.     

பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திடப்பட்டது.

இதனையடுத்து நடக்க இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.